(ஜெ.ஜெய்ஷிகன்)
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவில் உள்ள கல்மடு, விநாயகபுரம் என்னும் இடத்தில் மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்து வந்த குடும்பத்தில் பெரியான் சீனி எனும் வயோதிபர் ஒருவர் மரணம் அடைந்து உள்ளார். அவருடைய பூதவுடல் அடக்கம் செய்வதற்கு முன்னரே கல்மடு சமுர்த்தி உத்தியோகத்தரால் சமுர்த்தி திட்டத்தினால் வழங்கப்படும் மரணசெலவிற்க்கான கொடுப்பனவு 15000ம் ரூபா பெறுமதியான காசோலை வழங்கப்பட்டு அவ்வீட்டாரின் துக்கத்திலும் பங்கெடுத்திருந்தனர். இந் நடவடிக்கையை கிராம மக்கள் வெகுவாகப் பாராட்டப் படுவதை காணக்கூடியதாக உள்ளது.