மாற்றுத்திறனாளிகளுக்கான பரா விளையாட்டுக்கள்- 2017 தொடர்பான கலத்துரையாடல்

(ஜெ.ஜெய்ஷிகன்)

மாற்றுத்திறனாளிகளுக்கான பரா விளையாட்டுக்கள்- 2017 தொடர்பான சந்திப்பானது கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர்  அன்சார்  தலைமையில் மட்டக்களப்பு மாவட்டசமூகசேவைகள் அலுவலகத்தில் இன்று (18)நடைபெற்றது. 

லண்டனிலிருத்து வருகைதந்த பரா விளையாட்டுக்கள் ஒருங்கிணைப்பாளர் திரு S.சம்பந்தன், மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்கள், சமூகசேவை உத்தியோகத்தர்கள். அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் . அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள் ஆகியோருடன் கலத்துரையாடல் இடம்பெற்றது. கடந்த வருடத்தினைப்போல் இம்முறையும் பூரண ஒத்துழைப்பு கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்கள்த்தினால் வழங்கப்படுமென மாகாணப் பணிப்பாளர் உறுதியளித்தார்.