கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு

வெள்ளவத்தை சாலிமன் வீதியில்  நிர்மாணிக்கப்பட்டு வரும் 5 மாடிக் கட்ட்டமொன்று இன்று முற்பகல் இடிந்து வீழ்ந்ததில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

 இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்டெடுக்கும் பணியில்  தீயணைப்பு மற்றும் விமானப்படையினரும்   ஈடுபட்டுள்ளனர்.

14 பேர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 9 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையில் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.


இந்த சம்பவத்தில் கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் அருகிலிருந்த வாகனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.