பிரித்தானியாவின் மன்செஸ்டர் நகரில் குண்டு வெடிப்பு; 22 பேர் பலி, 50 பேர் காயம்

பிரித்தானியாவின் மன்செஸ்டர் நகரில் அமைந்துள்ள உள்ளக அரங்கு ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 22 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தில் 50இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய நேரப்படி நேற்றிரவு 10.35 மணியளவில் இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கப் பாடகி ஒருவரின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த மன்செஸ்டர் அரேனா அரங்கிலேயே இந்தக் குண்டுவெடிப்பு நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த உள்ளரங்கில் 18 ஆயிரம் இரசிகர்கள் கூடியிருந்த போதே குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

குண்டுவெடிப்புச் சம்பவத்தையடுத்து. அந்தப் பகுதி முழுவதும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.