களுவாஞ்சிகுடி பிரதான வீதியில், விஷ்னு ஆலயத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (19) நண்பகல் இடம்பெற்ற விபத்தில், 4 பேர் படுகாயமடைந்து, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்வாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த ரகுநாதன் (வயது 27), கவிதா (வயது 27), மற்றும் இவர்களது இரண்டரை வயது மகள் ரசிக்கா ஆகியோர் படுகாயமடைந்துள்ளதுடன், முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற யதுசன் (வயது 19) என்பவரும் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
இவ்விபத்துச் சம்பவம்; தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த ரகுநாதன் (வயது 27), கவிதா (வயது 27), மற்றும் இவர்களது இரண்டரை வயது மகள் ரசிக்கா ஆகியோர் படுகாயமடைந்துள்ளதுடன், முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற யதுசன் (வயது 19) என்பவரும் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
இவ்விபத்துச் சம்பவம்; தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.