மட்டக்களப்பில் போதைக்கு எதிராக மாணவர்களை விழிப்பூட்டும் பேரணி

போதைக்கு எதிராக மாணவர்களை விழிப்பூட்டும் மாபெரும் ஊர்வலமும், கூட்டமும் இன்று (சனிக்கிழமை) காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மேற்படி ஊர்வலம் மகாஜன கல்லூரியில் தொடங்கி மத்திய கல்லூரியில் முடிவடைந்ததுடன், மத்திய கல்லூரியில் அரச அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது.

கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் மாவட்ட சமுர்த்தி திணைக்களமும் மாவட்ட செயலகமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.

கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, தமிழ் தேசிய கூட்மைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் எஸ்.வியாழேந்திரன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் பாடசாலை மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் போதைப் பாவனையை ஒழிக்கும் வேலைத்திட்டத்தின்கீழ் இப்பேரணியும் பொதுக்கூட்டமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.