இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாகரைக் கிளையின் ஏற்பாட்டில் வாகரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் நினைவுரைகள்


(சிவம்)

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாகரைக் கிளையின் ஏற்பாட்டில் இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலின் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்ம சாந்தி வேண்டியும் ஆன்ம ஈடேற்றத்திற்காகவும் நினைவுச் சுடரேற்றும நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 9.00 மணிக்கு வாகரைப் பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெறும்.

இந்நிகழ்வில் கூட்டு வழிபாடு, அபிஸேகப் பூஜை, நினைவுச் சுடரேற்றல்இ நினைவுரைகள் மற்றும் அன்னதானம் என்பன இடம்பெறும். அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.