இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது.



பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயத்தின் கல்விபயிலும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் இலவச பாதணிகள் வழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் க.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமைப்பின் ஸ்தாபகர் கீர்த்தி இராசமாணிக்கம், சர்வதேச ஆலோசகர் தோமஸ் மற்றும் அமைப்பின் தவிசாளர் சாணகியன் இராசமாணிக்கம் ஆகியோருடன் பல பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.