மண்முனை மேற்கில் முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவு

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவுகள் வழங்கும் திட்டம் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் உதவியுடன் மேற்படி போசாக்கு உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

 மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு. அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு இவ் உணவு வழங்கும் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர்.