முதியோர் சங்கத்தினரால் வாழைச்சேனை வைத்தியசாலையில் சிரமதானம்

(ஜெ.ஜெய்ஷிகன்)
வாழைச்சேனை முதியோர் சங்கம் மற்றும் மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினரால் வாழைச்சேனை வைத்தியசாலையில் சிரமதானம் கடந்த சனிக்கிழமை  நடைபெற்றது.
முதியோர் சங்கத்தின் தலைவர் க.நடேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட முதியோர் சங்கங்களின் பிரதிநிதிகள், மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகளும்;; கலநது கொண்டனர்.
வைத்தியசாலையின் அத்தியட்சகர் எப்.பி.மதன் சுத்திகரிப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டதுடன் முதியோர்களது முன்னுதாரணமான மேற்படி செயற்பாடுகளுக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.