சிறு ஆடைத் தொழிற்சாலை நிலையம் திறப்பு விழா



(சா.நடனசபேசன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர்,  யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இரு சிறு ஆடைத் தொழிச்சாலை நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மாலை இடம்பெற்றது .

ஐக்கிய தேசியக்கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளரும், வணிகத்துறை அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகருமான சோ.கணேசமூர்த்தி அவர்களின் வேண்டுதலுக்கமைவாகவும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களின் அனுமதியுடன் மகிழுர் மற்றும் பெரியகல்லாறு ஆகிய இரண்டு பிரதேசங்களில் இந்த சிறு ஆடைத் தொழிச்சாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த இரண்டு நிலையங்களுக்கும் இருபது தையல் இயந்திரங்கள் ஆரம்பக்கட்டமாக வழங்கப்பட்டுள்ளன. இதில்  ஐக்கிய தேசியக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரும், வணிகத்துறை அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகருமான சோ.கணேசமூர்த்தி கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அமைச்சின் செயலாளர்கள் அரச அதிகாரிகள் பிரதேச பொதுமக்கள்இஎன கலந்து கொண்டனர்.