மட்டு. மாநகரசபையில் முதன்முறையாக உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்பட்ட இணையத்தளப்பரீட்சைக்கு பலரும் வரவேற்பு

மட்டக்களப்பு மாநகர சபையில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்களின் வினைத்திறனை அதிகரிக்குமுகமாக 18.05.2017 அன்று அலுவலக நடைமுறை மற்றும் நிதிப்பிரமானம் ஆகிய விடயங்கள் தொடர்பான பரீட்சை மாநகர ஆணையாளர் திரு.வெ.தவராஜா அவர்களின் வழிநடத்தலில் இணையதளம் மூலம் கணினிகளில் நேரடியாக நடாத்தப்பட்டது. 

இப்பரீட்சையில் சகல அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்களும் பதவிநிலை உத்தியோகத்தர்களின் மேற்பார்வையின் கீழ் கலந்துகொண்டனர்.  பரீட்சார்த்திகள் விடையளித்து சமர்ப்பிக்கும் போது தங்களுக்கான மதிப்பெண்ணை (புள்ளி) உடன் அறியக்கூடியதாகவும் சரியான விடைகளை தெரியக்கூடியவகையிலும் தொகுக்கப்பட்டிருந்தது. 
இத்தொகுப்பினை பிரதி ஆணையாளர் திரு.ந.தனஞ்ஜெயன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் திருமதி.ரோ.விக்னேஸ்வரன் ஆகியோரினால் வடிவமைக்கப்பட்டு நெறியாள்கை செய்யப்பட்டது.

இதன் மூலம் உத்தியோகத்தர்களின் வினைத்திறன் அதிகரிக்கப்படுவதுடன் அவர்களின் தடைதாண்டல் பரீட்சைக்கும் படிப்பினையாவிருக்குமென மாநகர ஆணையாளர் திரு.வெ.தவராஜா அவர்கள் தெரிவித்தார். 

இப்பரீட்சையில்  பரீட்சார்த்திகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.