நிந்தவூர், அட்டப்பள்ளம் ஸ்ரீ சித்தி வினாயகர் ஆலயத்தின் பாற்குடபவனி நிகழ்வு


[NR]

அம்பாறை மாவட்ட,  நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி வினாயகர் ஆலயத்தின் பாற்குடபவனி  நிகழ்வானது 19.05.2017 வெள்ளிக்கிழமை  இன்றையதினம்  நடைபெற்றது.


இப் பாற்குடபவனி நிகழ்வானது  சித்தி வினாயகர் ஆலயத்தின்  விசேட  வருடாந்த அலங்கார உற்சவத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இப்பாற்குடபவனி அட்டப்பள்ளம் ஸ்ரீ சிங்காரபுர மாரியம்மன் ஆலயத்திலிருந்து இருந்து ஆரம்பமாகி  பக்தர்களால் எடுத்துவரப்பட்டு விநாயகப் பெருமானுக்கு அபிஷேகம் இடம்பெற்று பூஜைகள் நடைபெற்றது.