சிறைக்குள் சிக்கிய ஹெரோயின்

திருகோணமலை சிறைச்சாலைக்குள் சூட்சுமமான முறையில் ஹெரோயின் போதை பொருளை கடத்த முற்பட்ட 20 வயது இளைஞர் ஒருவர் துறைமுக பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் திருகோணமலை சிறைச்சாலையில் இருக்கும் கைதி ஒருவருக்கு பற்பசை பக்கற்றிற்குள் அடைக்கப்பட்ட 100 மில்லிகிராம் ஹெரோயினை உணவுப் பொதியினுள் அடைத்து வழங்க முற்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் தமக்கும் இக்கடத்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தனக்கு அறிமுகமான ஒருவரே பொதி ஒன்றைக் கொடுத்து அனுப்பியதாகவும்; கைது செய்யப்பட்ட இளைஞர் கூறியுள்ளார்.


இதனையடுத்து உப்புவெளியில் வசிக்கும் இக்கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை கைதுசெய்யும் நடவடிக்கையில் துறைமுக பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.