பளையில் பொலிசார் மீது சூடு; இராணுவம் குவிப்பு

(பாறுக் ஷிஹான்)

கிளிநொச்சியின் புற நகர்ப் பகுதியில் அதிகாலையில் பொலிசார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது

இன்று(19)  அதிகாலை பளை பகுதியில் கடமையில் இருந்த 119 பொலிஸ் வாகனம் மீது இத் தூப்பாக்கி பிரயோகம்  மேற்கொள்ளப்பட்டது.

 இதன் போது  பளை  பொலிஸார் அங்கு கடமையில் இருந்துள்ளனர்.

இத்துப்பாக்கி சூட்டு சம்பவம்   அதிகாலை 01 மணி இடம்பெற்றதுடன் அப்பகுதியில் இருந்து துப்பாக்கி   பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட ரி-56 துப்பாக்கியின் பாகம் தற்போது   மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இப்பொழுது இராணுவத்தினர்  இந்தப்பகுதியில்  சுற்றி வளைத்து  தேடுதல் மேற்கொண்டுள்ளனர்.