இன்று புதிதாக நியமனம் பெற்ற அமைச்சர்கள்

இலங்கை மத்திய அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின்படி 9 காபினட்அமைச்சர்களும், ஒரு ராஜாங்க அமைச்சரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை முற்பகல் பதவிப் பிரமாணம் நடைபெற்றது. பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர்களின் இலாக்காக்கள் பின்வருமாறு:-

01.மங்கள சமரவீர - நிதி மற்றும் ஊடக அமைச்சர்
02.ரவி கருணாநாயக்கா - வெளி விவகார அமைச்சர்
03.அர்ஜுனா ரணதுங்க - பெட்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர்
04. எஸ்.பி திஸநாயக்கா - சமூக மேம்பாடு அபிவிருத்தி மற்றும் கண்டி மரபுரிமை அமைச்சர்
05.ஜோன் செனவிரத்ன - தொழில் , தொழிற்சங்க மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சர்
06. மகிந்த சமரசிங்க - துறைமுக அபிவிருத்தி மற்றும் கப்பல் துறை அமைச்சர்
07. சந்திம வீரக்கொடி - திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சர்
08.கயந்த கருணாதிலக - காணி மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர்
09. திலக் மாரப்பன சிறப்பு அபிவிருத்தி அமைச்சர்
9 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுடன் தற்போதைய மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர மகாவலி அபிவிருத்தி ராஜங்க அமைச்சராகவும் பதவியேற்றிருக்கின்றார்
குறித்த அமைச்சர்களில் 8 அமைச்சர்களின் அமைச்சக பதவிகளிலே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஏற்கனவே பதவி வகித்த அமைச்சுக்கள் பின்வருமாறு:-
01. மங்கள சமரவீர - வெளிவிவகார அமைச்சு
02. ரவி கருணாநாயக்கா - நிதி அமைச்சு
03.அர்ஜுன ரணதுங்க - துறைமுக அபிவிருத்தி மற்றும் கப்பல் துறை அமைச்சு
04.எஸ்.பி திஸநாயக்கா - சமூக மேம்பாடு மற்றும் நலன்புரி அமைச்சு
05.ஜோன் செனவிரத்ன - தெரில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு
06. சந்திம வீரககொடி - பெற்றோலிய வள அமைச்சு
07. மகிந்த சமரவீர - திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்ச்சி அமைச்சு
08. கயந்த கருணாதிலக - நாடாளுமன்ற அலுவல்கள் மற்றும் ஊடக அமைச்சு
புதிய அரசாங்கம் பதவியேற்றிருந்த வேளையில் சட்டம் . ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சராக அமைச்சர் திலக் மாரப்பன பதவியேற்றிருந்தார். அவரால் வெளியிட்ட கருத்தொன்றின் காரணமாக எழுந்த சர்ச்சையையடுத்து சில மாதங்களின் பின்னர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.