அம்பாறை மடுகலஎல பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதம் வலுப்பெற்றதை அடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் அம்பாறையிலுள்ள செங்கல் சூலையில் தொழிலுக்கு சென்றுள்ளனர்.
இவர்கள் மூவரும் மதுபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன் பின்னர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அம்பாறை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதம் வலுப்பெற்றதை அடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் அம்பாறையிலுள்ள செங்கல் சூலையில் தொழிலுக்கு சென்றுள்ளனர்.
இவர்கள் மூவரும் மதுபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன் பின்னர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அம்பாறை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.