கல்லாறுப் பகுதியைச் சேர்ந்த ஆணொருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு, பாலமுனைக் கடற்கரையோரத்தில் ஆணின் சடலமொன்றை நேற்று அதிகாலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்தச் சடலத்தைக் கண்ட பொதுமக்கள், இது தொடர்பில் தமக்குத் தகவல் வழங்கியதை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டதாகப் பொலிஸார் கூறினர்.



கல்லாறுப் பகுதியைச் சேர்ந்த 55 வயது மதிக்கதக்க ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்டதாகவும் பொலிஸார் கூறினர்.