21 வயது இளைஞனை இழுத்துச் சென்ற முதலை

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட தெலியன் கலப்பு பகுதியில் மீன் பிடிக்க சென்ற 21 வயது இளைஞனை முதலை இழுத்துச்சென்றுள்ளது.

குறித்த இளைஞன் இன்று அதிகாலை மூன்று மணியளவில் மீன்பிடிக்கச்சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காணாமல் போயுள்ள இளைஞனை தேடும் நடவடிக்கையில் கிராம மக்களும் பொலிஸாரும் ஈடுபட்டிருந்தனர்.

இவர் தம்பலகாமம், தாயிப் நகர் பகுதியைச்சேர்ந்த 21 வயதுடய ரிஸ்கான் எனவும் தெரிய வருகின்றது.

குறித்த நபருடய சடலம் இன்று மாலை 4 மணியளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் தம்பலகாமம் காவல்துறையினரால் பிரேதப் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.