கடந்த அரசாங்க காலத்தில் ஆட்சியாளர்கள் நடந்து கொண்ட அடாவடித் தனத்தினால் GSPவரி சலுகை நிறுத்தப்பட்டது- G..ஸ்ரீநேசன்

(வரதன்) தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் சிறந்த வெளிநாட்டு கொள்கைகள் காரணமாகதான் எமக்கு GS.P  கிடைத்துள்ளது இதனால் எமக்கு சர்வதேச சந்தைவாய்ப்பு கிடைக்கப்பெறவுள்ளதுடன் எமது ஏற்றுமதி பொருட்கள் (ஆடைகள்)உட்பட அனைத்து பொருட்களுக்கும் நல்ல கேள்வி ஏற்பட்டு எமது நாட்டு மக்களுக்கு அதிக வருமானம் கிடைக்கவுள்ளதென

வாழ்வோசை அமைப்பினரால் விசேடதேவையுடையோருக்கான வருடாந்த விளையாட்டு போட்டி மட்டு பாட்டாழி புர மைதானத்தில் இடம்பெற்றது.இங்கு பிரதம அதிதியாக கலந்து  கொண்டுமட்டு மாவட்ட பாராள மன்ற உறுப்பினர்  G..ஸ்ரீநேசன் கருத்து தெரிவித்தார்.

இங்கு சிறப்பு திறமை காட்டிய மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. கல்வி உயர் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனார்