மகிழூர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும்-2017


(ரவிப்ரியா)

மகிழூர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் சாதனையாளர் பாராட்டு நிகழ்வும்,  கௌரவிப்பு நிகழ்வு -2017 ஆலய பரிபாலன சபைத் தலைவர் இ.விவேகானந்தராசா அவர்களின் தலைமையில் இடம் பெற்றபோது.  முக்கிய நிகழ்வாக மகிழூர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் 39 வருட காலம் பூசகராக இறைபணி செய்த பூசகர் வ.கிருஸ்ணபிள்ளை அவர்களை ஆலய பரிபாலன சபையினர் கௌரவித்து பாராட்டியதுடன், மகிழூர் பெரும் பிரதேசத்தில் காணப்படும் மூன்று பாடசாலைகளிலும் இருந்து 2016ம் ஆண்டு நடைபெற்ற (க.பொ.த) சாதாரணதரப் பரீட்சையில் முதன்மைச் சித்தி பெற்ற மாணவர்களும், தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

அத்தோடு மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தினை அதிகரிப்பதற்காக சமயஅறிவு மற்றும் பொதுஅறிவு சம்பந்தமான போட்டி நிகழ்வுகள் நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்படுவதைப் படங்களில் காணலாம்; இந்நிகழ்வுகளில் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள், மகிழூர் மேற்கு  கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் மகிழூர் மேற்கு கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.