வறிய மாணவர்கள் 45 பேருக்குப் புத்தகப்பைகள் விநியோகம்



கல்குடா கல்வி வலயத்தில் உள்ள மதுரங்கேணிக்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் உள்ள மிகவும் வறிய மாணவர்கள் 45 பேருக்கான புத்தகப்பைகள் அஹிம்சா நிறுவனத்தினால்; வழங்கிவைக்கும் நிகழ்வு அவ் அமைப்பின் தலைவர் வி.விஜயராஜா அவர்களால் பாடசாலையில் வைத்து அப்பாடசாலையின் அதிபரிடம் கையளிக்கப்பட்டன.

இதில் அவ் அமைப்பின் ஆலோசகர் வசந்தராஜா, பாடசாலை அதிபர் மங்களரூபன் மற்றும் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்