கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்படும் மாகாண மட்டத்திலான தரம் 5 புலமைப் பரிசில் மாதிரிப் பரீட்சை

(சித்தா)
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் மாகாண மட்டத்திலான மாதிரிப் பரீட்சைகளை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த வகையில் மாதிரிப் பரீட்சை I எதிர்வரும் 20.06.2017 ஆம் திகதியும், பரீட்சை II எதிர்வரும் 07.07.2017 ஆம் திகதியும், பரீட்சை III எதிர்வரும் 20.07.2017 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.
இதற்கு அமைவாக பட்டிருப்பு கல்வி வலய பாடசாலை அதிபர்கள் தங்கள் பாடசாலைக்குரிய மாதிரி பரீட்சை வினாப் பத்திரங்களை பரீட்சை நடைபெறும் அன்றைய தினம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் ஆரம்பக் கல்விப் பிரிவில் காலை 7.30 மணிக்கு பெற்றுக் கொள்ளமுடியும் என்பதை பட்டிருப்பு கல்வி வலயத்தின் ஆரம்பக் கல்விப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன் தெரிவித்துள்ளார்.