சைட்டம் ஆர்ப்பாட்டம் ! தடியடிப் பிரயோகம், ! 87 மாணவர்கள், 6 பொலிஸார் ஆஸ்பத்திரியில்

மாணவர்களைக் கலைக்க தடியடிப் பிரயோகம், நீர்த்தாரை வீச்சு:

சைற்றத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து நேற்று பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நகர மண்டப பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவை மீறி பெரும் கோஷங்களுடன் நேற்று ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட மாணவர்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் மேற்கொண்ட நீர்த்தாரை பிரயோகத்தில் 87 மாணவர்கள்   காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாகாணவர்கள் சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி பிரவேசிக்க முற்பட்டதை அடுத்து பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ள நேர்ந்தது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட மாணவ சங்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறுகளை ஏற்படுத்தாத வண்ணம் அமைதியாக ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.