நிந்தவூர் பிரதேசத்தில் பெண் ஒருவர் மயக்கமுற்ற நிலையில் மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (20) காலை 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விடயம் சம்பந்தமாக நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை தொடர்பு கொண்டு கேட்ட போது :
60 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் தற்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவித்தனர்.
இவரின் பயணப் பொதியை பரிசோதனை செய்த போது, அதில் 19 ஆம் திகதி திகதியிடப்பட்ட, கல்லாறிலிருந்து கல்முனைக்கு செல்வதற்கான பஸ் பிரயாண பயணச் சீட்டு (Bus Ticket) ஒன்று காணப்பட்டுள்ளது.
குறித்த மரணம் சம்பந்தமாக சம்மாந்துறைப் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் திருமதி சகிலா இஸ்ஸடீன் தெரிவித்தார்.
இது தொடர்பில் பொதுமக்களின் உதவியை நாடுவதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (20) காலை 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விடயம் சம்பந்தமாக நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை தொடர்பு கொண்டு கேட்ட போது :
60 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் தற்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவித்தனர்.
இவரின் பயணப் பொதியை பரிசோதனை செய்த போது, அதில் 19 ஆம் திகதி திகதியிடப்பட்ட, கல்லாறிலிருந்து கல்முனைக்கு செல்வதற்கான பஸ் பிரயாண பயணச் சீட்டு (Bus Ticket) ஒன்று காணப்பட்டுள்ளது.
குறித்த மரணம் சம்பந்தமாக சம்மாந்துறைப் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் திருமதி சகிலா இஸ்ஸடீன் தெரிவித்தார்.
இது தொடர்பில் பொதுமக்களின் உதவியை நாடுவதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர்.