கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு

(கதிரவன்)

கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் 259 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான நியமன கடிதம் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை 2017.06.14 மாலை உவர்மலை விவேகாநந்தா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.


கல்வி அமைச்சின் செயலாளர் அசங்க அயவர்த்தன தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நசீர் அகமட், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதாணி, கிழக்கு மாகாண சபை தலைவர் ஆரியதாச கலபதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் ஆகியோர் கலந்து கொண்டு நியமன கடிதங்களை வழங்கி வைத்தனர்.