ஏறாவூர் சமுக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் எப்.எம்.பாரூக் அவர்களின் தலைமையில் ரமழான் இப்தார் நிகழ்வுகள் நேற்றைய தினம் ஏற்பாட்டுக் குழுவினரின் ஏற்பாட்டில் ஏறாவூரில் அமைந்துள்ள அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சமயங்களுக்கிடையிலான ஒற்றுமையைப் பறை சாற்றும் வண்ணம் பிரதேசத்தைச் சேர்ந்த சகல மதத் தலைவர்கள் உட்பட ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, ஏறாவூர் நகர்ப் பிரதேச செயலக சமுக சேவை உத்தியோகஸ்தர் அலியார், இயன் மருத்துவர் பறக்கதுல்லாஹ், இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட விசாரணை அதிகாரி தஸீர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது நோன்பு திறப்பு நிகழ்வு இடம்பெற்றதுடன் விசேட இப்தார் சிந்தனையும் துவாவும் மௌலவி றியாஸ் (பயாஸி) அவர்களினால் நிகழ்த்தப்பட்டமையும் குறிப்படத்தக்கது.