தாழங்குடாவைச் சேர்ந்தவர்களான புவனசிங்கம் சதீஸ் (வயது 17) என்ற மாணவன் பலியான அதேவேளை, கனேந்திரன் யோயல் (வயது 18) என்ற மாணவன் படுகாயமடைந்துள்ளான்.
இந்த இரு மாணவர்களும் பயணித்த மோட்டார் சைக்கிள், மண்முனைப் பாலத்துக்கு அருகிலுள்ள மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
அதிகூடிய வேகமே இந்த விபத்துக்குக் காரணம் என்று தெரியவருகின்றது எனத் தெரிவித்த பொலிஸார், இந்த விபத்துத் தொடர்பில் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.