மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய தலைவர் ம.மகேஸ்வரன் இறைபதமடைந்தார்


 (ரவிப்ரியா)
பெரியகல்லாற்றை பிறப்பிடமாகவும். கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்டவரும், கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய பரம்பரை தலைவருமான மயில்வாகனம் மகேஸ்வரன் 16.06.2017 வெள்ளியன்று வெள்ளியன்று இரவு தனது 49வது வயதில் இறைபதமடைந்தார். எல்லோரினதும் அன்புக்குப் பாத்திரமாக திகழ்ந்த அவர் முன்னாள் பிரபல அரச கொந்துராத்துக்காரரான அமரர் மயில்வாகனத்தின் ஏக புதல்வராவார். தந்தை வழியே இவரும் சிறந்த அரச
கொந்துராத்துக்காரராகும். பழைய கல்முனை வீதியில் உள்ள இவரது 12ஃ4ம் இலக்க இல்லத்திலிருந்து ஆரம்ப கிரியைகளைத் தொடர்ந்து இவரது பூதவுடல் 18.06.2017 பி.ப. 3.00 மணிக்கு தகனக்கிரியைக்காக கல்லடி உப்போடை இந்து மயானத்திற்கு எடுத்தச் செல்லப்படும்.