மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மீண்டும் வலியுறுத்தல்

மின் உற்பத்திக்கு போதுமான மழைவீழ்ச்சி இடம்பெறவில்லை என்று மின்வலு அமைச்சின் ஊடகப் பேச்சாளரும் அபிவிருத்திப் பணிப்பாளருமான  சுரஞ்சன் ஜயவர்த்தன தெரிவித்தார்.

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மின் உற்பத்தி நிலையங்கள் சார்ந்த நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் 48 சதவீதத்தைத் தாண்டி அதிகரித்துள்ளது.


எனினும் இது மின் உற்பத்திக்கு போதுமானதாக இல்லை. இதன் காரணமாக, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று  திரு.ஜயவர்த்தன கோரிக்கை விடுத்தார்.