தங்கச்சங்கிலி அபகரிப்பு

நாவிதன்வெளிப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவரின் இரண்டரைப் பவுண் தங்கச்சங்கிலி சனிக்கிழமை (17) மாலை அறுத்துச் செல்லப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச் சென்ற தாய், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தனது சங்கிலியை மகனிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்.

இந்தச் சங்கிலியை கழுத்தில் அணிந்துகொண்டு சைக்கிளில் மகன் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவர் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸில் மேற்படி இளைஞர் முறைப்பாடு செய்துள்ள நிலையில், அது தொடர்பான விசாரணையைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.