தம்பி இறந்த சோகத்தில் அண்ணன் தற்கொலை ! ஏற்கனவே இரு சகோதரிகள் பாம்புகடியால் இறந்துள்ளனர்

தம்பி இறந்த சோகத்தில் அண்ணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஓன்று மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது

மரணமடைந்தவர் வாகரை 5ம் வட்டாரத்தைச்சேர்ந்த தெய்வேந்திரன் மோகனதரன்  வயது 28 என திடீர் மரண விசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ் தெரிவித்தார்.
சம்பவம் பற்றி மேலும்  தெரியவருவதாவது  கடந்த வியாழக்கிழமை அன்று  இரவு தனது தம்பி (தெய்வேந்திரன் லோகிதன் - 23 வயது ) மாரடைப்பால் மரணமானதை அறிந்து உடனே தம்பி இல்லாத உலகத்தில் நான் வாழ மாட்டேன் எனக் கூறிக் கொண்டு கயிற்றை எடுத்துக் கொண்டு ஓடியவர்  அயலில் உள்ள நாவல் மரத்தில் தூக்கில்தொங்கிய நிலை யில் மீட்கப்பட்டு வாகரை மற்றும் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு மாற்றி பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று  மரணமானார்.

பிரேதப் பரிசோதனை B.k.p.I றொற்றிகோ அவர்கள் மேற்கொண்டார். தனக்கு தானே கழுத்தில் சுருக்கிட்டுத் தூக்கில் தொங்கிய காரணத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு மூளை செயலிழந்தமையினால் சம்பவித்த தற்கொலை மரணம் என திடீர் மரண விசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ் அவர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மரணமானவரின் இரு சகோதரிகள் பாம்பு கடிக்கு முன்பு மரணமானார்கள் என்பது குறிப்பிட்ட தக்கது
தற்கொலை உளவியலும் தற்காப்பு உளநலமும்  http://www.battinews.com/2016/02/-suicide-psychology-and-psychiatry-.html