சவூதியில் தங்கியுள்ள 3500 இலங்கையர்கள் நாட்டுக்குவர தயாராகியுள்ளனர்


சவூதி அரேபியா வழங்கியிருக்கும் பொது மன்னிப்பு காலத்தில் சட்டவிராேதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் 3 ஆயிரத்து 500 பேர் நாட்டுக்குவர தயாராகியுள்ளனர் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது

இதுதொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தொழிலுக்காக சவூதிக்கு சென்று அவர்களது ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் அந்த நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு 3 மாதகால பொது மன்னிப்பு வழங்க சவூதி தீர்மானித்தது. அதனடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் ஜூன் 25ஆம் திகதி வரை பொதுமன்னிப்பு காலம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.