பிரதேச செயலக மாற்றுத்திறனாளிகளுக்கிடையிலான 'பரா ஒலிம்பிக்-2017' இற்கான தெரிவுப் போட்டிகள் இன்று நடைபெற்றது

(ஜெ.ஜெய்ஷிகன்)
மாற்றுத்திறனாளிகளுக்கான 'பரா ஒலிம்பிக்-2017' இற்கான தெரிவுப் போட்டிகள் இன்று கோறளைப்பற்று பிரதேச சபை மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தின் தலைவர் சி.பரமானந்தம் தலைமையில் தெரிவுப் போட்டிகள் காலை 9.00 மணி தொடக்கம் 12.30 மணிவரை நடைபெற்றது.

கோறளைப்பற்றுஇ கோறளைப்பற்று தெற்குஇ கோறளைப்பற்று மத்திஇ கோறளைப்பற்று தெற்குஇ கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் இத் தெரிவுப் போட்டிகளில் கலந்து கொண்டு தமது உடற் திறன்களை வெளிப்படுத்தினர்.இப் போட்டி நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சமூகசேவை உத்தியோகத்தர்கள்இ கிழக்கு மாகாண சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்இ மத்தியரசின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 கிழக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான 'பரா ஒலிம்பிக்-2017' இறுதிப் போட்டிகள் எதிர்வரும் ஓகஸ்ட் 5இ6ஆம் திகதிகளில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத் தக்கது.