திருகோணமலை பீரங்கிடை முகாமில் பயிற்சியினைப் பெற்ற வீரர்கள் 214 பேரின் வெளியேறும் நிகழ்வு


(கதிரவன் )

இலங்கை இராணுத்தின் திருகோணமலை கிளப்பன்பேர்க் பீரங்கிடை முகாமில் 7 மாத காலபயிற்சியினைப் பெற்ற வீரர்கள் 214 பேரின் வெளியேறும் நிகழ்வு நேற்று  சனிக்கிழமை 2017.07.15 காலை நடைபெற்றது. 

இந்நிகழ்வில் 22வது படைப்பிரிவின் கட்டளைத்தளதி மேஜர் ஜெனரல் கே.ஏ.பி.ஜயசேகர அதிதியாக கலந்து கொண்டு மரியாதை அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். பயிற்சியின் போது திறமைகாட்டிய 7 வீரர்களுக்கு  விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது.