உறுகாமம் வெலிக்காகண்டி பிரதேசத்தில் விதை நிலக்கடலை அறுவடை விழா

மட்டக்களப்பு மாவட்டத்தின்  ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உறுகாமம் வெலிக்காகண்டி பிரதேசத்தில் விதை நிலக்கடலை அறுவடை விழா  வெகு சிறப்புடன் நடைபெற்றது.




விவசாயப் போதனாசிரியர் ரி.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவி விவசாயப் பணிப்பாளர் வீ.பேரின்பராஜா அதிதியாக கலந்துகொண்டு  அறுவடையினை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது கரடியனாறு விவசாய விதை அத்தாட்சி பிரிவு உத்தியோகத்தர்,  விவாயப் போதனாசிரியர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.