நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி இம்மாதம் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை, பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை நிறுத்தி டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் இணைந்து பாடசாலையை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் இத்தினத்தில் ஈடுபடவேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.