தாய்வான் நாட்டின் தாய்ச்சுன் சர்வதேச வை.எம்.சீ.ஏ பிரதிநிதிகள் குழு மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கத்திற்கு விஜயம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

தாய்வான் நாட்டின் தாய்ச்சுன் சர்வதேச வை.எம்.சீ.ஏவின் 40 பேர் கொண்ட இளைஞர்,யுவதிகள் குழு 22 இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கத்திற்கு விஜயம் செய்தனர்.

மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏவுக்கும் தாய்வான் தாய்ச்சுன் சர்வதேச வை.எம்.சீ.ஏவுக்கும் இடையில் நடைபெறும் இளைஞர்,யுவதிகளுக்கான பரிமாற்று வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கத்திற்கு விஜயம் செய்த தாய்ச்சுன் வை.எம்.சீ.ஏ பிரதிநிதிகளை மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ பிரதிநிதிகளும்,வை.எம்.சீ.ஏ வாழ்வோசை பாடசாலை மாணவர்களும் வரவேற்றனர்.

அதன் பின்னர் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில்; இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் மட்டு-கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் தலைவர் ஈ.வி.தர்ஷன், முன்னாள் மட்டு-கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் தலைவரும்,முன்னாள் மட்டு-மாநகர சபையின் பிரதி மேயருமான ஜோர்ஜ்பிள்ளை ஆகியோர் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ.வின் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், மட்டக்களப்பு நகரின் சிறப்புக்கள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.


குறித்த நிகழ்வில் மட்டு-கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜீ.ஜெகன் ஜீவராஜ்,இயக்குனர் சபை உறுப்பினர் டிக்ஷன் றாகல் உட்பட மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தாய்வான் நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகைதந்துள்ள தாய்ச்சுன் சர்வதேச வை.எம்.சீ.ஏ பிரதிநிதிகள் குழு 7 நாட்கள் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏவில் தங்கி இருந்து மட்டக்களப்பு,வாகரை ஆகிய பிரதேசங்களில் பல்வேறு சமூக சேவை பணிகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.