கிழக்கினை மேம்பட்டதுமானதொரு மாகாணமாக உருவாக்க இணைந்து பணியாற்றுவோம் - கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுனர்


(வரதன்)
மட்டக்களப்புக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுனராகப்பதவியேற்றுள்ள ரோஹித்த போகொல்லாகம மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி யொசப் பொன்னையாவை ஆயரில்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். நடைபெற்ற இச் சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

ஜனாதிபதியின் பிரதிநிதியாக என்னை கிழக்குமாகாணத்திற்கு ஜனாதிபதியவர்கள் நியமித்திருக்கிறார். அந்த வகையில் மட்டக்களப்புக்கான எனது விஜயத்தில் ஆயர் அவர்களைச் சந்தித்தேன். இன்று பல்வேறு விடயங்களைக் குறித்தும் கலந்துரையாடினோம். எனது செற்பாடுகளில் தன்னுடைய ஒத்துழைப்பு முழுமையாக இருக்கும் என்று ஆயர் அவர்கள் உறுதியளித்திருக்கிறார்.