உதயன்மூலை விவேகானந்தா வித்தியாலய சரஸ்வதி சிலை திறப்புவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும்

(ஓவியா)
மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்திலுள்ள உதயன்மூலை விவேகானந்தா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை திறப்பு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் சனிக்கிழமை 15ஆம் திகதி நடைபெற்றது.


பாடசாலை அதிபர் திருமதி.மனோன் மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாக்களில் அதிதிகளாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம், மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன். கல்குடா வலயக் கல்விப்பணிப்பாளர் ரி.ரவி, ஓய்வுநிலை வலயக் கல்விப் பணிப்பாளர் கே.சத்தியநாதன் போன்றோர் கலந்துகொண்டனர்.

பாடசாலை முன்றலில் அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை கிழக்கு மாகாண விவசாய அமைச்சரினால் திறக்கப்பட்டதுடன் தொடர்ந்து இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன். அமைச்சர் துரைராஜசிங்கம் உள்ளிட்ட அதிதிகளால் ஆசிரியர், மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வின்போது அண்மையில் வலயக் கல்விப் பணிப்பாளராக பதவியேற்று இங்கு வருiகாந்த கல்குடா வலயக் கல்விப்பணிபாளர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டர்.