வீதி விபத்தில் ஒருவர் படுகாயம்

காத்தான்குடி நகர மத்தியில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற வீதி விபத்தில், துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவருடைய காலுடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கல்முனை வீதியில் காத்தான்குடி நகருக்கூடாக துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்ருந்த 56 வயதான எம்.நூர்முஹம்மது என்பவர் மீது, வேகமாகச் சென்றுகொண்டிருந்த உழவு இயந்திரமும் நெல் மூடைகளை ஏற்றிய அதன் இழுவைப் பெட்டியும் மோதியதில் இவ் விபத்து சம்பவித்துள்ளது.


காயமடைந்தவர், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சத்திர சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

உழவு இயந்திரத்தைக் கைப்பற்றியதோடு, சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.