கிழக்கு மாகாண தடைகள விளையாட்டில் அம்பாறை வலயம் முதலிடம்

கிழக்கு மாகாண தடைகள சுவட்டு விளையாட்டுப் போட்டியில் அம்பாறை வலயம் 208 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தை பெற்றுக்கொண்டது.
பட்டிருப்பு வலய மாணவர்கள் 203 புள்ளிகளைப் பெற்று மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.

கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இப்போட்டி நேற்று முன்தினம் புதன்கிழமை வரையில் நடைபெற்றது. இவ் மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் 16 தங்கப்பதக்கங்கள், 13 வெள்ளிப்பதக்கங்கள், 06 வெண்கலப்பதக்கங்களை மாணவர்கள் பெற்றுள்ளார்கள்.

மேலும் கிழக்கு மாகாணத்தின் 14 வயதின் சிறந்த மெய்வல்லுனராக களுதாவளை மகாவித்தியாலய மாணவி எஸ்.றக்சனா மற்றும் 16 வயது பிரிவின் சிறந்த மெய்வல்லுனராக ஜெ.ரிசானனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.