மாமாங்கேஸ்வரர் ஆலய உற்சவத்தின் திருத்தொண்டர் சபையின் கலைக் கதம்பம் நிகழ்வு

(வரதன்)
கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற பிள்ளையார் ஆலயங்களிலொன்றானஅமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த  உற்சவத்தின் திருத்தொண்டர் சபையின் கலைக் கதம்பம் நிகழ்வு  நேற்றுமாலை இடம்பெற்றது.
இதில் சிறப்பு நிகழ்வாக ஆஞ்சநேயரின் வரலாறு சொற்பொழிவு தமிழருவி சிவக்குமார் அவர்களால் நிகழ்த்தப்பட்டது மற்றும் பல்வேறு வகையானகலாச்சார நடனங்களும் இடம்பெற்றன.


இதேவேளை மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு திருத்தொண்டர் சபையினால் அன்னதான நிகழ்வு நேற்றுமதியம் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.