நீண்ட இடைவெளியின் பின்னர் குழந்தை பாக்கியம்: மகிழ்ச்சி தாங்கிக்கொள்ள முடியாது உயிரை விட்ட தாயார்..

நீண்ட இடைவெளியின் பின்னர் குழந்தை பாக்கியம் கிடைத்த தாய் ஒருவர், மகிழ்ச்சி தாங்கிக்கொள்ள முடியாது மாரடைப்பினால் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று தம்புத்தேகமயில் பதிவாகியுள்ளது

திருமணம் முடிந்து பல ஆண்டுகளின் பின்னர் முதல் குழந்தையை ஈன்றெடுத்த தாய் ஒருவர், சிசுவைப் பார்த்து அந்த சந்தோசத்தை தாங்கிக்கொள்ள முடியாது உயிரிழந்துள்ளமை கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தம்புத்தேகம மருத்துவமனையில் கடந்த 12 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதயம் வெடித்து குறித்த பெண் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 31 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறான மரணங்கள் ஆயிரக்கணக்கானோரில் ஒரு மரணமே சம்பவிக்கும் என சட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

குழந்தை ஈன்றெடுத்த போது தாய் ஆரோக்கியமாக இருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.