மட்டக்களப்பில் பின்வரும் இடங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நீர் விநியோகம்



தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வவுணதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலுள்ள நிலக்கீழ் நீர் சேமிப்புத் தொட்டியில் 2017.07.18ம் திகதி செவ்வாய்க் கிழமை பராமரிப்பு வேலைகள் இடம்பெறவுள்ளதனால் அன்றைய தினம் நண்பகல் 12.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தின் கீழ் உள்ள செங்கலடி, மட்டக்களப்பு, ஏறாவூர், இருதயபுரம், காத்தான்குடி, கல்லடி, ஆரையம்பதி, களுவாஞ்சிகுடி, கல்லாறு, வவுணதீவு மற்றும் மண்டூர் ஆகிய நீர் வழங்கல் நிலையங்களினுடான நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்படும் என பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர்   டி.ஏ. பிரகாஷ்  தெரிவித்துள்ளார்.


எனவே பொது மக்கள் அன்றைய தினம் நீரினை சேமித்து வைத்து பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.