கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் களுதாவளை மகா வித்தியாலயம் சாதனை

(SITHTHA) மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் இடம்பெற்ற 10 வது கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி - 2017 இல் மட்/பட்/களுதாவளை மகா வித்தியாலய மாணவர்கள் 16 தங்கப் பதக்கங்கள், 13 வெள்ளிப்பதக்கங்கள் மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். 

அத்தோடு, இப்பாடசாலை மாணவர்களான றக்சனா - 14 வயதின்கீழ் பிரிவிலும், ஜெ. ரிசானண் - 16 வயதின்கீழ் பிரிவிலும் சிறந்த மெய்வல்லுனர்களாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். மேலும், ஆண்கள் மெய்வல்லுனர் மற்றும் ஆண்கள் அஞ்சல் அணி என்பனவற்றில் CHAMPION களாகவும் வெற்றி பெற்றுள்ளனர்.  

பட்டிருப்பு கல்வி வலயம் பெற்றுக்கொண்ட 203 புள்ளிகளில் இப்பாடசாலை 137 புள்ளிகளைப் பெற்றிருந்தது. வெற்றிபெற்ற மாணவர்களையும் அவர்களைப் பயிற்றுவித்த பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் ஜெயரெட்ணம் மற்றும் பழைய மாணவர் வதிஸ்குமார் மற்றும் உதவி புரிந்த சகல ஆசிரியர்களுக்கும் அதிபர், ஆசிரியர்கள், மற்றும் பழைய மாணவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர்.