மகளிர் சாரணர் குழுவினரால் இரத்ததானம் முகாம்

 (கதிரவன் )
திருகோணமலை  ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி சாரணர் குழுவைச் சேர்ந்த மாணவி மொகமட் ஹசன் பாத்திமா பஸ்சானா இரத்ததானம் முகாம் ஒன்றினை நடத்தியுள்ளார்.  நேற்று  சனிக்கிழமை 2017.07.15 காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 1.00 மணிவரை இது நடத்தப்பட்டது. 73 பேர் குருதிக் கொடை வழங்கினார்கள். ஜனாதிபதி சாரணர் விருதினை வென்றெடுப்பதற்காக இது மேற்கொள்ளப்பட்டது. 


சாரணர் ஆசிரியர் அசோக் அவர்களின் வழிநடத்தலில் கல்லூரி அதிபர் திருமதி சுலோசனா ஜெயபாலனின் அனுமதியுடன் இது மேற்கொள்ளப்பட்டது. சாரணர் மாணவிகளின் பெற்றோர்கள்  இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கியிருந்தார்கள். 
திருகோணமலை பொது வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினரால் குருதி சேகரிக்கப்பட்டது.