கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின் ஆரம்பநாள் நிகழ்வுகள், இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில், கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி,ஏ.நிசாம் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகம , கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் , கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் , கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி , கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம் , பிரசன்னா இந்திரகுமார் மற்றும் பல அதிதிகள் கலந்துகொண்டனர் .