சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரத்தில் புதிய மாற்றங்கள்



சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரத்தில் உட­லு­றுப்­புக்­களைத் தானம் செய்ய விருப்­பமா இல்­லையா என்ற சார­தியின் விருப்­பத்தை உள்­ள­டக்­கிய புதிய இலத்­தி­ர­னியல் சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரத்தை உரு­வாக்­க­வுள்­ள­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

அதன்­மூலம், குறித்த சாரதி எவ்­வ­கை­யான விபத்தில் உயி­ரி­ழக்க நேரிட்­டாலும் அவ­ரது உடல் உறுப்­புக்­களை தான­மாக பெற்­றுக்­கொள்­வ­தற்கே இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

விபத்­தின்­போது உயி­ரி­ழக்க நேரிட்ட சார­தியின் சிறு­நீ­ரகம், இதயம், நுரை­யீரல், ஈரல் என்­ப­வற்றை எடுத்து அவை தேவைப்­ப­டு­கின்ற நோயா­ளி­க­ளுக்கு பொருத்தி நோயா­ளி­க­ளுக்கு ஒரு மறு­வாழ்வைக் கொடுக்கும் முயற்­சி­யா­கவே இது கரு­தப்­படும். அத்­துடன், சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரத்தில் இவ்­வி­டயம் உள்­ள­டங்­கி­யி­ருந்தால் இவற்றை மிகவும் விரை­வாக மேற்­கொள்ள முடியும் எனவும் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

ஆகவே, மிகவும் குறு­கிய காலப்­ப­கு­திக்குள் இதை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் அனைத்தும் மேற்­கொள்ளப்படும் எனவும் அமைச்சு தெரி­வித்துள்ளது.