தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் 42 வது பிறந்த தினத்தை சிறப்பித்து ஒரு தொகுதி நூல்கள் கையளிப்பு.

(ஜெ.ஜெய்ஷிகன்)
முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர்  சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் 42 வது பிறந்த தினத்தை சிறப்பிக்கும் முகமாக மாகாண சபை உறுப்பினர் நா.திரவியம்  பேத்தாழை பொது நூலகத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான  மாணவர்களுக்கான கடந்த கால வினா விடை புத்தகங்கள் உட்பட பல பெறுமதியான நூல்கள் கோறளைப் பற்று பிரதேச சபையின் செயலாளர், நூலக உத்தியோகத்தர்கள், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

முன்னாள் முதலமச்சர் சந்திரகாந்தனினால் அமைக்கப்பட்ட இந் நூலகம் பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மட்டுமல்லாது அயல் பிரதேச மாணவர்கள்இ வாசகர்கள் என பலரது அறிவுப் பசிக்கு தீனி போட்டு வருவதோடு இலங்கையின் கணனி மயப்படுத்தப்பட்ட முதலாவது பொது நூலகம் என்பதும் சிறப்புடையதும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.